சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் முதல் சந்திப்பு
2023 டிசம்பர் 10 முதல் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இரண்டாவது சந்திப்பு
2025 டிசம்பர் 28 இரண்டாவது சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் ஆசிரியர்கள் ராஜகோபால், கணேசன், குலோத்துங்கன், கந்தசாமி மற்றும் தற்போதுபள்ளியின் தலைமை ஆசிரியர் சாமிவேல், சரவணன் மற்றும் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா குமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதனையடுத்து 30000 மதிப்பில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ,அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டு பள்ளிக்கும் தலா 30 நாற்காலி முன்னாள் மாணவர்கள் சார்பாக வழங்கப்பட்டது.
வரவேற்புரை:
சாதிக் ஷெரிப் வரவேற்புரை ஆற்றினார்
நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் வேல்முருகன் அரசினர் மேல்நிலைப் பள்ளி கெங்கவல்லியில் தற்போது முதல் மதிப்பெண் பெற்ற 7 மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பாக தலா ₹1000 வீதம்7000 மும், கபாடி சிறப்பாக விளையாடும் மாணவருக்கு ₹1000 மும்
அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கெங்கவல்லியில் பயின்று வரும் மாணவிகள் ஆத்தூர் மாரத்தான் போட்டியில் காவியா, பிரிதிஷா 2 வது, 3 வதாக வந்த 2 மாணவிகளுக்கு தலா 1000 வீதம் மொத்தம் 10 ஆயிரம் வழங்கப்பட்டது.
முன்னாள் மாணவர்கள் சார்பாக பள்ளியில் 3 மரக்கன்றுகள் நடப்பட்டது.விழாவில் 100 மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாக் குழுவினர் கவிதா மனோகர், கோகிலா, கவிதா மாது, வேல் முருகன், சாதிக் ஷெரிப், இளவரசு, மணிவண்ணன், விஜயபாஸ்கர், திருப்பூர் சுரேஷ், செழியன், சக்திவேல். சுரேஷ்.ஆகியோர் விழா சிறப்படைய முன்னின்று செய்தனர்.நன்றி உரை கவிதா மனோகர் நன்றி உரை கூறினார்.






