ஆத்தூரில் ஓரணியில் தமிழ்நாடு தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை கலைஞர் திடலில் நேற்று மாலை ஓர் அணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்கிற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தலைமை சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் தலைமை வகித்தார் .ஆத்தூர் நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், ராமச்சந்திரன், வரவேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி கலந்துகொண்டு பேசிய போது தமிழக முதல்வர் தமிழ்நாட்டுக்காக எடுத்த வரும் முயற்சிகள் எண்ணற்ற முயற்சிகள் என்றும் இதுவரை மகளிர் உரிமைத்தொகை 90% கொடுத்துள்ளனர் என்றும் உடனடியாக தகுதி பெரும் அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும் மகளிர் பேருந்து இதுவரை 730 கோடி முறை மகளிர்கள் பயணம் செய்துள்ளனர் என்றும் கூறினார் .கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை கொடுத்து கொண்டிருக்கும் ஒரு கட்சி என்றால் திமுக என்றும் மேலும் சேலம் மாவட்டம் என்றால் வீரபாண்டியார் கோட்டையாக இருந்தது இதை மீண்டும் நீங்கள் செயல்படுத்தி வருகிற சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் தமிழ்நாட்டை தலை துணிய விடமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.விழாவில் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன், ஒன்றிய செயலாளர்கள் செழியன் வரதராஜன், சித்தார்த்தன், கெங்கவல்லி பேரூர்செயலாளர் பாலமுருகன், தலைவாசல் மத்திய தொகுதி ஒன்றிய செயலாளர் மணி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், ஆத்தூர் நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன் ,நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர், அழகரசன், சோமு, , ஆவின் செல்வமணி, அருண், பர்கத் அலி,அசோகன், பைத்தூர் ரவி,மல்லியகரை ராஜா, மஞ்சினி செல்வம் ,அரசு, செந்தில், நகர மன்ற உறுப்பினர்கள் சம்பத், சசிகுமார் , சிவாஜி, வினோத்,சையது, மனோஜ் குமார், மற்றும் 5000க்கு மேற்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  • Related Posts

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்! 💐 அன்பும் அரவணைப்பும் இணைந்த இல்லறம், ஆனந்தம் என்றும் மலரும் இனிய வாழ்க்கை. கைகோர்த்து தொடங்கிய காதல் பயணம், காலங்கள் கடந்தும் இனிதே தொடரட்டும். சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் .வி ஸ்ரீராம்…

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    சேலம் மாவட்டம் ஆத்தூர் ரோட்டரி சங்கத்தின் சார்பில் அன்னபூர்ணா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஜெய்கணேஷ் தலைமையில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தலைவர் செந்தில்குமார், பொருளாளர் ராகவேந்திரன், செயலாளர் முத்துக்குமரன், சர்வீஸ் பிராஜெக்ட் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பாரத் டைம்ஸ் ஹபீப்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    You Missed

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    உங்கள் குரல் சார்பில் திருமணநாள் வாழ்த்துக்கள்.

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கிய ரோட்டரி

    ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு நலத்திட்ட உதவி வழங்கும் மாவட்ட செயலாளர்

    திமுக நிர்வாகிகளுக்கு 30 லட்சத்திற்கு  நலத்திட்ட உதவி   வழங்கும் மாவட்ட செயலாளர்

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம் போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை உண்ணாவிரதம்  போராட்டம் மாவட்ட பொருளாளர் அழைப்பு

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்

    உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிருப்பு போராட்டம்