சேலம் மாவட்டம் ஆத்தூர் 17வது வார்டில் 53 லட்ச ரூபாய்க்கு தரைப்பாலம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது .இந்த பூமி பூஜை விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர் .வி .ஸ்ரீராம் ,நகர பொறுப்பாளர் ஏ.ஜி.ராமச்சந்திரன்,
நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா மணிகண்டன், நகராட்சி ஆணையாளர் சையது முஸ்தபா கமால் , மௌலானாக்கள் இம்ரான், அப்துல் ரகீப் ,இனாயத்துல்லாஹ் மற்றும் நகர மன்ற உறுப்பினர் சம்பத்குமார், சிறுபான்மை பிரிவின் மாவட்ட தலைவர் பர்கத் அலி, துணை தலைவர் லியாகத் அலி,
அஸ்கர் அலி ,மக்புல் பாஷா ,ஜியாவுல் ஹக், முகமது அப்துல் காதர் ,17 வது வார்டு செயலாளர் முகமது யூனுஸ் ,17-வது வார்டு பொருளாளர் பாக முகவர் அசாருதீன் ,யாசர் அராபத் ,அசாருதீன் ,நகர அவை தலைவர் மாணிக்கம், அபு டிரேடர்ஸ் ஹாரிஸ் , கூட்டணி கட்சியைச் சார்ந்த ஆமீன் ரகுமான் மற்றும் 17வது வார்டில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் பொழுது இந்த பகுதியில் தரைப்பாலம் 30 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்து பாலம் கட்டித் தர வேண்டும் என்று பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை இப்பொழுது தமிழக முதல்வர் மற்றும் நகர மன்ற தலைவரிடம் மனு அளித்தவுடன் உடனடியாக 53 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தற்போது இந்த பாலத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது இதனால் இந்த பகுதியில் உள்ள மூன்று வார்டில் உள்ள பொதுமக்கள் பஜார் மற்றும் உழவர் சந்தை பள்ளிக்கூடம் செல்வதற்கு சுலபமாக இருக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.






