சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர செயலாளர் வேல்முருகன் தலைமையில் திமுக தலைமை உத்தரவின் அடிப்படையில் விளையாட்டு துறை சார்பில் நேற்று கிரிக்கெட் போட்டி மற்றும் கபடி போட்டி நடைபெற்றது கிரிக்கெட் போட்டி ஆத்தூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 அணிகளாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் சான்றிதழ் வழங்கப்பட்டது .இதனை அடுத்து தில்லைநகர் திட்டாசேரி பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் 10க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் சான்றிதழ் வழங்கப்பட்டது மேலும் இந்த விளையாட்டுப் போட்டி விழாவில் நரசிங்கபுரம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் , நகர மன்ற உறுப்பினர் செல்வகுமார்,சேலம் கிழக்கு மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் ஆவின் செல்வமணி நரசிங்கபுரம் நகர பொருளாளர் இளவரசு ,நகர துணை செயலாளர் பரமசிவம் மற்றும் , விவசாய அணி நகர அமைப்பாளர் ராஜா ,நகர தொழிலாளர் அனி அமைப்பாளர் தியாகராஜன், வார்டு பொறுப்பாளர்கள் ஞானசேகரன், கருணாநிதி, வார்டு செயலாளர் அசோகன்,மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.







