சேலம் மாவட்டம் தாலுகாவிற்கு உட்பட்ட கருமந்துறை கிராங்காடு பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன் திமுக கிளை செயலாளர் இவரை நேற்று 9 மணி அளவில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சென்றுள்ளனர் இது குறித்து கருமந்துறை போலீசருக்கு இரவு 11 மணியளவில் தகவல் தெரிந்ததின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சுட்டவர் யார் என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பு காணப்பட்டது.






